09/09/2023
அவிநாசி, தெக்கலூரில் கே.பி.ஆர் மில் குவாண்டம் நிட்ஸ்-3-யில் "திசைகள் கடந்த இசை" என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கே.பி.ஆர். நிறுவனம் மற்றும் சம்ஸ்கர் பாரத் இனைந்து, கே.பி.ஆர் மில்லில் பணிபுரியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களுக்கு இசை பயிற்சி வகுப்பு துவங்கியது. இந்த இசை பயிற்சியினை சங்கமித்ரா நுண்கலை மையத்தின் இயக்குநரும், சம்ஸ்கர் பாரத்தின் சங்கீதவிதா மாநில பொறுப்பாளருமான மகேஷ்வரி சுப்ரமணி கலந்துகொண்டு பயிற்றுவித்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, உடுமலை, ஆர்.கே.ஆர். கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.கே.ராமசாமி மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
KPR Mill Limited