29/04/2024
*இஎஸ்ஜ மருத்துவமனைகளில்* *மாபெரும் மோசடி*
*நடவடிக்கை எடுக்குமா அரசு*
அனைவருக்கும் வணக்கம் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஜ மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துக்கள் ஏழைத் தொழிலாளருக்கு வழங்கப்படாமல் காலாவதி ஆவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துக்கள் பெருந்துறை சிப்காட் குட்டப்பாளையம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் வீசப்பட்டது ஏன் மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இது உண்மையான ஈஎஸ்ஐ மருந்து தான் என்று உறுதி செய்துள்ளனர் ஆனால் இன்னும் ஏன் இந்த மருந்துகள் குப்பையில் வீசப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை இதற்கு காரணமானவர்கள் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை சுகாதாரத்துறை அலுவலர்களும் தவறு செய்த மருத்துவருக்கு ஆதரவாக உள்ளனர் இந்த நிகழ்வில் தவறு செய்த மருத்துவர்கள் மீதும் அதிகாரிகளின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் இது நடவடிக்கை எடுக்க கோரி சென்னிமலை அல்லது பெருந்துறையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதில் தவறு செய்தவர்கள் பெயர் வெளியிடப்படும்
என்றும் தேசப்பணியில் k.சுந்தரராசு .
பொதுச் செயலாளர்
சென்னிமலை தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி