17/11/2020
ஜோதிடத்தில் இருக்கும் முக்கியமான கிரகமாகிய சனி பகவான் பற்றிய ஒரு மிக முக்கியமான தகவல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
★நாம் போன ஜென்மத்தில் எந்தெந்த விஷயங்களில் அல்லது எந்த பாவம் சார்ந்து அகங்காரதிலும் ஆணவதிலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருக்கிறோமோ,
★எந்த ஒரு விஷயம் நமக்கு போன ஜென்மத்தில் அதிகமாக கிடைத்து அதன் அருமை புரியாமல் அலட்சியமாக இருந்தோமோ,எந்த விஷயத்தை கொண்டு நான் போன ஜென்மத்தில் scene போட்டோமோ
★அது எல்லாம் இந்த ஜென்மத்தில் சனி பகவான் controlல் வந்துவிடும்.
★ போன ஜென்மத்தில் நாம் செய்த தவறை பழி தீர்க்க ,இந்த ஜென்மத்தில் சனீஸ்வரர் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறாறோ அந்தப் பாவத்தின் மூலமாக நம்மை இந்த ஜென்மத்தில் வச்சி செய்வார்.
அல்லது பழி தீர்ப்பார்.
★நமது ஜாதகத்தில் சனி பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நமக்கு late செய்வார். அல்லது தாமதப்படுத்தும்.இல்லையென்றால் கிடைக்காமல் செய்து விடும்.
★இந்த ஜென்மத்தில் நாம் சனீஸ்வரிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டுமென்றால்.
★நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சனி பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறாறோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் ஒருபோதும் ஆணவம், அகங்காரம்,அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வது scene போடுவது இருக்கக்கூடாது.
★சனி இருக்கும் பாவத்தைப் பற்றி வெளியில் தூக்கி பேச கூடாது.ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
★இல்லையென்றால் சனீஸ்வரர் அந்த பாவத்தையே அழித்து விடுவார்.
★சனியுடன் சேர்ந்து இருக்கும் கிரக காரகத்துவம் இது பொருந்தும்
★யாரெல்லாம் அகங்காரதிலும் ஆணவத்திலும் ஆடுகிறார்களோ அவர்களைத்தான் சனீஸ்வரர் முதலில் பிடிப்பார்.அவர்கள் மீதுதான் சனி பார்வை படும்.
★தன்னடக்கத்துடன் நாவடக்கதுடன் இருப்பவர்கள்.அல்லது நடந்து கொள்பவர்கள் சனிபகவானுடைய அருள் பெற்றவர்கள் ஆவர்.
★இப்பொழுது நமது ஜாதகத்தில் என்ன செய்தால் நாம் சனீஸ்வரிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதை ஒவ்வொரு பாவ ரீதியாக பார்க்கலாம்.
1.(★2ம் பாவத்தில் சனி இருந்தால் நம்முடைய வருமானத்தைப் பற்றி வெளியே தூக்கி பேசக்கூடாது.மீறிப் பேசினால் வருமானம் out.)
2.(★4ம் பாவகத்தில் சனி இருந்தால் வீடு வண்டி வாகனம் சொத்து சுகம் படிப்பு பற்றி வெளியே தூக்கி பேசவே கூடாது)
3.(★5ம் பாவத்தில் யாருக்கெல்லாம் சனி இருக்கிறதோ அவர்கள் சீமந்தம் வெகு விமர்சியாக grand ஆக செய்யக்கூடாது மீறி செய்தால் சனீஸ்வரர் அதற்குத் தகுந்தவாறு தண்டனையை கொடுத்து விடுவார்)
4.(★6ம் பாவத்தில் சனி இருந்தால் உத்தியோகம்(job) மற்றும் ஆரோக்கியம் பற்றி வெளியில் தூக்கி பேசக்கூடாது.)
5.(★7ம் பாவத்தில் சனி இருந்தால் திருமணத்தை grand ஆக செய்யக்கூடாது வெகு விமர்சையாக செய்யக்கூடாது.)
6.(★8ம் பாவத்தில் சனி இருந்தால் ஆயுளைப் பற்றி வெளியே தூக்கி பேசக்கூடாது)
7.(★9ம் பாவத்தில் சனி இருந்தால் தந்தை தந்தையுடைய சொத்து நம்முடைய உயர்கல்வி(higher education) பற்றி வெளியே தூக்கி பேசக் கூடாது )
8.(★10ம் பாவத்தில் சனி இருந்தால் தொழில் பற்றி ஒருபோதும் வெளியில் தூக்கி பேசக்கூடாது.
அப்படிப் பேசினால் தொழிலிலையே காலி செய்துவிடுவார்)
9.(★11ம் பதினோராம் பாவத்தில் சனி இருந்தால் தன்னுடைய லாபத்தை பற்றி ஒருபோதும் வெளியே தூக்கி பேசக்கூடாது.)
10.(★12ம் பாவத்தில் சனி இருந்தால் ஒருபோதும் தன்னுடைய விரயச் செலவுகள் மற்றும் அயன சயன போகம் .காமம் சம்பந்தப்பட்ட விஷயத்தை வெளியே தூக்கி பேசக்கூடாது)
11.(★3ம் பாவத்தில் சனி இருந்தால் தன்னுடைய இளைய சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பற்றி வெளியே தூக்கி பேசக்கூடாது)
12.(★லக்னத்திலேயே சனி இருந்தால் ஜாதகர் எதை பற்றியுமே வெளியே தூக்கி பேசக்கூடாது)
★ஜாதகத்தில் சனி எங்கிருக்கிறார் என்று பாருங்கள் அந்த பாவத்திற்கு தகுந்தவாறு நாம் நம்மை மாற்றிக் கொண்டால்,விழிப்புணர்வுடன் இருந்தால் இந்த ஜென்மத்தில் சனி பகவானிடம் இருந்து நாம் சுலபமாக தப்பித்து விடலாம்.escape ஆகி விடலாம்.
★இப்படி நாம் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால் சனீஸ்வரர் நம்மை ஒன்றும் செய்யமாட்டார் .
★இல்லையென்றால் சனீஸ்வரரிடம் நாம் சிக்கி நம் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும்.சனி பகவான் நம்மை வச்சி செய்து விடுவார்.
★சனி பகவானிடம் நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.
★சனியுடன் சேரும் கிரக காரகத்துவம் இது பொருந்தும்.
★ஒவ்வொரு கிரகத்துடன் சனீஸ்வரர் சேர்ந்தால் என்ன பிரச்சினை வரும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
★(ஜோதிடம் சார்ந்த ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்)