ALPHA Associates - P LTD

ALPHA Associates - P LTD Alpha Associates is widely recognized for its pioneering role as a residential developer / builders in Tirunelveli having set new standards in the housing

20/07/2019

ஒரு பில்டர் சென்னையில் 1.5 கோடிக்கு 1000 சதுரமீட்டர் இடம்வாங்குகிறார்.

பத்திரசெலவு மற்றும் பதிவுகட்டணம் 11% = 16.5 லட்சம்

அதில் 1300 சதுரமீட்டரில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டுகிறார் என்றால் அதன் அதன் கட்டுமான செலவு 1300 x 20000 = 2.6 கோடி

இதர செலவுகள்:
ஆர்க்கிடெக்ட் 3% (7.8 லட்சம்), ஸ்ட்ரெச்சுரல் 2% (5.2 லட்சம்) கட்டுமானசெலவில்.

அபிவிருத்திகட்டணம் @200 சதுரமீட்டருக்கு (2.6 லட்சம்)

மேல்நிலைத்தொட்டி (5லட்சம்)

கட்டுமான செலவு இல்லாமல் மொத்தம் = 1.8 கோடி

பில்டர் 13 வீடுகள் ஒவ்வொரு வீடும் 100 சதுரமீட்டரில் கட்டுகிறார்.

அதன் ஒன்றின் விலை 45 லட்சம் என விற்கிறார்.

பிளாட் வாங்குபவரின் செலவுகள் :
வீட்டின்விலை 45 இலட்சம்

GST 5.6 லட்சம்

ஆவணசெலவு 1.35 லட்சம்

பதிவுகட்டணம் 90 ஆயிரம்

போன்றவற்றை பிளாட் வாங்குபவர் செலவுசெய்கிறார்

பில்டர் 1% வாட்வரியாக 45 ஆயிரம்கட்டுகிறார்

ஆகா மொத்தம் ஒரு வீடு விற்கும்போது 8.3 லட்சம் ரூபாய் அரசு பெறுகிறது.

13 x 8.3 இலட்சம் = 1.8 கோடி

வீடுவாங்குபவர் ஏற்கனவே தான் சேர்த்துவைத்த 45 இலட்சத்திற்கு வருமானவரி கட்டி இருக்கிறார்

அதேபோல் பில்டரும் 1.5 கோடிக்கு வருமானவரி கட்டிஇருக்கிறார்.

பில்டருக்கு 1.5 கோடிக்கு இடம் விற்றவர் தோராயமாக 10 இலட்சம் வரியை முதலீட்டு இலாபமாக இடம்விற்றதில் கட்டியிருப்பார்.

ஆக மொத்தம் அனைத்து கட்டுமான வேலைகளும் முடித்து பில்டர் அனைத்து பிளாட்டுகளையும் விற்று பெற்ற தொகை:

13 x 45 லட்சம் = 5.85 கோடி

கட்டுமானசெலவு = 1300 x 20000 = 2.6 கோடி

இடத்தின்விலை மற்றும் அப்ரூவல் கட்டணம் = 1.8 கோடி

மொத்தம் செலவு= 4.4 கோடி

மொத்த வருமானம் = 5.85 கோடி

லாபம் = 5.85 – 4.4 = 1.45 கோடி

இதில் வருமான வரி 30% போகமீதி = 1 கோடி
முடிவுரை :
பில்டர் 3 வருடங்கள் கஷ்டப்பட்டு பாடுபட்டு கட்டிடத்தை கட்டி அந்த 13 பிளாட்டுகளையும் நாயாய் அலைந்துவிற்று அதன்மூலம் அவர் பெரும் வருமானம் 1 கோடி.

எந்த வித முதலீடும் இல்லாமல் அரசுபெரும் வருமானம் :

இடம் விற்றவரிடம் 10 லட்சம் (முதலீட்டு இலாப வாரியாக)

இடம் வாங்கியவர்களிடம் 1.8 கோடி (GST , பத்திரசெலவு)

பில்டரிடம் 45 லட்சம் – வருமானவரியாக

ஆக மொத்தம் 2.38 கோடி

இதுதான் இன்றைய கட்டுமானதொழிலின் நிலை

இதில் பில்டர் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் என்ற பழிச்சொல் வேறு.

இதுமட்டுமல்ல தொழில்வரி, தொழிலாளர் நல நிதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இலவச பரிசுகள் இப்படி இன்னும் இருக்கின்றன முடியல இப்பவே கணக்கு போட்டு டயர்டாகிட்டேன்.

ஒன்னுமட்டும் தெரிஞ்சுக்கோங்க, அரசு ஒரு 75% பங்குபயனை அடையக்கூடிய கூடிய முதல்போடாத பார்ட்னர்.

இதுதான் இன்றைய வரி கட்டமைப்பின் உண்மையானநிலை.

- my bricks

Water at 80 feet in borewell progress at our site zion nagar
10/07/2019

Water at 80 feet in borewell progress at our site zion nagar

15/06/2017

வீட்டு மனை பத்திரப் பதிவுக்கு புதிய அரசாணை! முழு விபரம்

பதிவு துறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நில மதிப்பு குறைந்த நிலையில்கூட நிலங்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பு ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையிலேயே நீடிக்கிறது. எனவே, அதன் அடிப்படையிலேயே பத்திர பதிவு கட்டணமும் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கிறது.

இந்த கட்டணத்தில் பத்திர பதிவு செய்ய மக்கள் தயங்கியதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. எனவே, வழிகாட்டி மதிப்பீட்டுத் தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும் என சொல்லப்படுகிறது.





08.06.2017 நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு எண். 360 நாள் 08.06.2017 செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பத்திர பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதை கருத்தில்கொண்டு, பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல் 33 சதவீதம் அளவு குறைத்து ஆணையிட்டுள்ளது.

இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய விற்பனை (Conveyance), பரிமாற்றம் (Exchange), தானம் (Gift) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு (Settlement) போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு 9.6.2017 முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு ஆணை சொல்வதென்னெ?

9.6.2017 முதல் 33 சதவீதம் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியானது. தமிழகம் முழுவதிலுமுள்ள 50 பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து கிராம புல எண்கள் மற்றும் தெருக்கள்/நகர்களுக்கு பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் 9.06.2017 தேதி முதல் கிரையம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கான ஏற்பாடு ஆகிய நான்கு வகையான தன்மையுடைய ஆவணங்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 1%-இல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை ஒருங்கே நடைமுறைப்படுத்த (Simultaneous Implementation) வேண்டிய நடைமுறைகள்:

1.சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி (Market value Guidelines) ஆனது தற்போது 08.06.2017 தேதியில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியிலிருந்து 33 சதவீதம் குறைக்கப்பட்டு 09.06.2017 தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சீரமைக்கப்பட்ட சதுர மீட்டர் மதிப்பானது 08.06-2017 தேதியில் இணையதளத்தில் உள்ள மதிப்பில் 67% சதவீதம் சதுரமீட்டர் மதிப்பு பொறுத்து Rounded to Next 5 Rupees ஹெக்டேர் மதிப்பு பொறுத்து Rounded to Next 500 Rupees கடைபிடிக்கப்பட வேண்டும்.

2. பதிவு அலுவலர்கள் 09.06.2017 தேதி முதல் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் பொறுத்து சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியினை கடைபிடித்து பதிவுகள் மேற்கொண்டு மதிப்பு குறைவு இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பதிவு ஆணை எண்.19136/ப/நாள் 22.04.1998ன் படி ஆவணப்பதிவுகளின் மூலமான உயர்மதிப்புகளை அடுத்துவரும் ஆவணங்களுக்கு கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

3.ஆவண தாக்கல் நாளில் உள்ள வழிகாட்டி மதிப்பிற்கு குறைவான மதிப்பில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு ஆவணத் தாக்கல் நாளில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியின் படியே இந்திய முத்திரைத்தாள் சட்டப் பிரிவு 47 A1/A3 நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும் 09.06.2017 தேதி, மற்றும் அதற்கு பின்னர் பதிவு செய்யப்படும் ஆவணங்களைப் பொறுத்து 09.06.2017 தேதிக்கு முந்தைய பதிவு புள்ளி விவரங்களை கருத்தில் கொண்டு சார்பதிவாளர்கள் பரிந்துரை செய்வதோ மாவட்ட வருவாய் அலுவலர்/ தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் முன் ஆவணப்பதிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பு நிர்ணயம் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.

4. 04.06.2017 தேதி மற்றும் அதற்குப் பின்னர் பதிவுக்குத் தாக்கல் செய்யப்படும் ஆவணத்தில் கண்ட ஓர் சொத்து பொறுத்து 09.06.2017 தேதிக்கு முன்னர் அதே சொத்து பதிவு செய்யப்பட்ட முன் ஆவணத்தில் கண்ட உயர்மதிப்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்/ தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் நிர்ணயித்த உயர்மதிப்பின் அடிப்படையில் மதிப்பு குறைவு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளலாகாது.

5. கட்டிடம் பொறுத்தும் முன் ஆவணப்பதிவில் கண்ட கட்டிட மதிப்பினை கடைபிடிக்க வேண்டும் என பதிவு அலுவலர்கள் ஆவணதாரர்களை நிர்பந்தித்தல் கூடாது. நடைமுறையில் உள்ள பொதுப்பணித்துறை தளவிலைப்பட்டியலில் படியான மதிப்பினை அனுசரித்தாலே போதுமானது.

6. 08.06.2017 தேதி மற்றும் அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட/பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயத்திற்காக நிலுவையிலுள்ள வழக்குகள் பொறுத்தமட்டில் பழைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே மதிப்பு நிர்ணயம் செய்து அதனடிப்படையில் செயல்பட வேண்டும். அவ்வாறான மனை/மனை பிரிவுகளுக்கு 09.06.2017 தேதி முதல் மதிப்பு 33 சதவீதம் குறைத்து மேலே வரிசை 1-இல் குறிப்பிட்ட நடைமுறைப்படி கடைபிடித்திட வேண்டும்.

7. 09.06.2017 தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் பொறுத்த மதிப்பு நிர்ணய வழக்குகளுக்கு 09.06.2017 தேதிக்கு முன்னர் உள்ள சம்பந்தப்பட்ட சர்வே எண் மதிப்பினையோ, சுற்றி உள்ள மதிப்பினையோ பதிவு புள்ளி விவரப்படியான உயர்மதிப்பினையோ கருத்தில் கொள்ளுதல் கூடாது. ஆனால், 09.06.2017 தேதிக்குப் பிறகு ஏற்படும் உயர்மதிப்புகளை கருத்தில் கொண்டு பதிவு சுற்றறிக்கை எண். 01/2014 நாள் 27.01.2014 (கோப்பு எண் 3321/ப/2014 மற்றும் தொடர்புடைடைய பதிவு ஆணைகளைப் பின்பற்றி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

8. சீரமைக்கப்பட்ட மதிப்பானது இணையதளத்தில் 08.06.2017 தேதியில் கண்டுள்ள மதிப்பிற்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே முரண்பாடு களையப்பட்டு அல்லது மதிப்பு நிர்ணம் செய்யப்பட்டு அம்மதிப்பு இணையத்தளத்தில் உட்புகுத்த விடுபட்டிருக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து சார்பதிவாளர்கள் மாவட்ட பதிவாளர் வழி துணை பதிவுத் துறை தலைவர் ஆணையை பெற்று சீரமைக்கப்பட்ட மதிப்பு விவரத்தினை பதித்துறைத்தலைவடுக்கு தெரிவிக்கும் நிலைலையில் இணையதளத்தில் உரிய மதிப்பு மாற்றம் செய்யப்படும்.

9. முன் ஆவணங்களில் கண்ட மதிப்புகளை கருத்தில் கொள்ளக் கூடாது எனினும் ஓர் சொத்து பொறூத்து உடன்படிக்கை அமுலில் இருந்தால் அம்மதிப்பு சீரமைக்கப்பட்டுள்ள மதிப்பை விட கூடுதலாக இருக்கும்பட்சத்தில் உடன்படிக்கை ஆவணத்தில் கண்ட மதிப்பையே சந்தை மதிப்பாகக் கருத்தில் கொண்டு பதிவு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஆனால், சீரமைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னரோ பின்னரோ உடன்படிக்கை ஆவணம் ரத்து செய்யப்பட்டிருப்பின், ரத்து செய்யப்பட்ட உடன்படிக்கை ஆவணத்தில் கண்ட மதிப்பினை அதே ஆவணதாரர்களாக இருப்பின், கடைபிடித்திட நிர்பதித்தல் கூடாது.

10. சந்தை மதிப்பு வழிகாட்டி 33 சதவீதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரையம்(Conveyance), பரிவர்த்தனை(Exchange) தானம் (Gift), மற்றும் குடும்ப நபர் அல்லாதவர்களுக்கிடையேயான ஏற்பாடு( Settlement in Favour of Non Family Members) [Articles 23, 31, 33 and 58 (a)(ii) of Schedule I of the Indian Stamp Act, 1899] ஆவணங்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக பார்வை 2-இல் கண்ட அரசாணையின்படி உயர்த்தப்பட்டுள்ளதை பதிவு அலுவலர்கள் கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

11. மேலும் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டியானது 9.6.2017 முதல் (பத்தி 9க்குட்பட்டு) பதிவுக்கு தாக்கல் ஆகும் அனைத்து வகையான ஆவணங்களுக்கும் பொருந்தும், 1%-இல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணமானது பத்தி 11-இல் கூறப்பட்டுள்ள நான்கு வகையான தன்மையுடைய ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

12. மேற்சொன்ன நடைமுறைக்குட்பட்டு மாவட்டப் பதிவாளர்கள் தங்களது தணிக்கை பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

13. இச்சுற்றறிக்கையின் 1 முதல் 12 வரையிலான நெறிமுறைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்களது எல்லைகுட்பட்ட சார்பதிவகங்கள், மாவட்டப்பதிவாளர் அலுவலகம், துணைபதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகங்களில் பதாதைகள் (Flex Board) மூலம் நன்கு விளம்பரப்படுத்தப்படுவதை மாவட்டப்பதிவாளர்கள்/துணைப்பதிவுத் துறைத்தலைவர்கள் ஆகியோர் உறுதி செய்திடல் வேண்டும்.

14. பதிவு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வரும் 09.36.2017 தேதி முதல் 13.06.2017 வரையிலான ஆவணப் பதிவுகளுக்கு சார்பதிவாளர்கள் முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணங்கள் உச்சவரம்பின்றி ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைப்பதன் மூலம் ரூ.900 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

C.P.சரவணன், வழக்கறிஞர்
செல்பேசி எண் - 9840052475

References:

1. சுற்றறிக்கை எண்.25735/C1/2017 நாள் 08.06.2017 பதிவுத்துறை தலைவர் அலுவலகம், சென்னை
2. G.O.Ms.No.49 Commercial Taxes & Registration (J2) Department Dated 08.06.2017
3. 31.5.2017 நாளிட்ட மதிப்பீட்டுக் குழு (Valuation Committee) கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பு

ஒரு சொத்து வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அத்தனை விவரங்களையும் அலசி ஆராய்வோம். அந்த சொத்து எந்த பகுதியில் அமைந்திருக...
28/09/2015

ஒரு சொத்து வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அத்தனை விவரங்களையும் அலசி ஆராய்வோம். அந்த சொத்து எந்த பகுதியில் அமைந்திருக்கிறது? அருகில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்வோம்.

பராமரிப்பு

அப்படி சொத்து வாங்கும்போது எத்தகைய அக்கறையை செலுத்துகிறோமோ? அதில் பாதி அளவிற்காவது அந்த சொத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்துகிறோமா? என் பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சொத்தை பாதுகாப்பது என்பது அடிக்கடி நேரில் சென்று பார்வையிடுவதுடன் முடிந்துவிடும் விஷயமில்லை. அந்த சொத்து ஆவணங்களை முறையாக பராமரித்து வருவதையும் பாதுகாப்பு விஷயமாக எடுத்துக்கொண்டாலும் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக பத்திரப்பதிவு செய்தவுடன் அந்த சொத்து நமக்கு கைமாறிவிடும் என்றாலும் அந்த சொத்துக்கான பட்டாவை நம்முடைய பெயரில் மாற்றிவிட்டோமா என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். சில சமயங்களில் நிலத்தை நமக்கு விற்பனை செய்பவர் பெயரில் பட்டா இருக்காது. அவருடைய பெற்றோர் பெயரில் இருக்கும்.

பட்டா மாறுதல்

அப்படி இருக்கையில் அவர் தன்னுடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் அவரிடம் இருந்து சொத்து வாங்கியவுடன் நம்முடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

பட்டா மாறுதல் செய்வதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது உங்கள் தந்தை அல்லது தாயாரின் பெயரில் நிலம் வாங்கப்பட்டிருந்து அவர்கள் இறந்துவிட்டால் தொடர்ந்து அவர்கள் பெயரிலேயே பட்டா இருந்தால் பின்னாளில் பிரச்சினை ஏற்படும். உடனே வாரிசுரிமை சான்றிதழ் பெற்று உங்கள் பெயருக்கு மாற்றிகொள்ள வேண்டும்.

ஆவண சரிபார்ப்பு

உங்கள் பெயரில் பட்டா வாங்கி வைத்திருந்து அதை பாதுகாத்து அந்த சொத்துக்கு தொடர்ந்து வரி செலுத்தி விட்டு வந்தால் மட்டும் போதாது. பட்டாவில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? வருவாய்த்துறை ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். இணையதளம் மூலம் சரிபார்க்கும் வசதி இருப்பதால் அடிக்கடி சொத்து உங்கள் பெயரில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் போலி பட்டா மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். சொத்து வாங்கும்போது எப்படி வில்லங்க சான்றிதழ் வாங்கி சொத்து பரிமாற்ற விவரங்களை சரி பார்த்தோமோ அதேபோல் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் உங்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கும் வில்லங்க சான்றிதழ் வாங்கி சரிபார்க்க வேண்டும்.

வில்லங்க சான்று விவரம்

அப்படி பார்க்கும்போது நீங்கள் பத்திரப்பதிவு செய்த நாளுக்கு பிறகு ஏதாவது சொத்து பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் சொத்து பத்திர நகல் களை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது. தற்போது இணையதளம் வாயிலாகவே வில்லங்க சான்று விவரங்களை சரிபார்க்கும் வசதி இருப்பதால் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும்.

சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலோ அல்லது சொத்து தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும் முதலிலேயே மூல ஆவணங்களை எடுத்து செல்லக்கூடாது. அதன் நகல் ஆவணங்களைத்தான் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் ஆவணங்கள் தொலைந்து போக நேரிட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆவண குறிப்பு

வீட்டில் எப்போதும் நகல் ஆவண பிரதிநிதிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சொத்தின் சர்வே எண், பட்டா எண், பத்திர பதிவு விவரங்கள் குறித்த எண்கள் போன்ற விவரங்களை டைரியில் எழுதி வைக்க வேண்டும். ஒருவேளை மூல ஆவணங்கள் காணாமல் போய்விட்டாலோ அல்லது சேதம் அடைந்துவிட்டாலோ இந்த விவரங்கள் மீண்டும் சொத்து ஆவணங்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

அதுபோல நீங்கள் வாங்கியிருக்கும் சொத்து பற்றிய விவரங்களை உங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் மைனராக இருந்தால் பருவ வயதை எட்டும்போது சொத்து விவரங்களை அவர் களிடம் கூறுவது அவசியம். ஒருவேளை உங்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ அல்லது உங்கள் காலத்திற்கு பிறகு அந்த சொத்தை மற்றவர்கள் யாரும் நிலமோசடியோ, அபகரிப்போ செய்யாமல் தடுக்க முடியும்.

21/07/2015
30/06/2015

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்;
*********************************

ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம்.

உட்பிரிவு பட்டா:
************************
அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.

உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும். அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும்.

கவனமாக இருக்க வேண்டும்:
*********************************************
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.

காலம் தாழ்த்தக்கூடாது:
**************************************
அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும். அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்த...
29/06/2015

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்;
*********************************

ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம்.

உட்பிரிவு பட்டா:
************************
அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.

உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும். அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும்.

கவனமாக இருக்க வேண்டும்:
*********************************************
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.

காலம் தாழ்த்தக்கூடாது:
**************************************
அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும். அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.

Our ZION Nagar layout
21/06/2015

Our ZION Nagar layout

Are you interested to be a part of this golden opportunity? Come and join with us, your dream will become true........➢ ...
07/05/2015

Are you interested to be a part of this golden opportunity? Come and join with us, your dream will become true........

➢ Clean and fresh environment.
➢ Broad roads for good transportation.
➢ Red soil suited to create sweet home.
➢ Good and sweet ground water at 30 feet.
➢ Calm environment.
➢ Separate space for park and worship places.
➢ For immediate registration.
➢ After registration we will get you patta and pay the vacant land tax and save the land for 10 years.
➢ For resale’s you can approach us and get a good profit.
➢ Servicing our customers for more than 18 years.

Address

No. 7, South Bazaar
Palayankottai
627002

Alerts

Be the first to know and let us send you an email when ALPHA Associates - P LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ALPHA Associates - P LTD:

Share