21/04/2021
#திருசெந்தூர்முருகன்கோவில்பன்னீர்இலை_விபூதி :!!!!!
திருப்பதிக்கு லட்டு!!!!!
பழனிக்கு பஞ்சாமிர்தம்....!!!
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு
பிரசாதம் இலை விபூதி!!!!
பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது.
எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
#ஆதி_சங்கரர் இந்த
#இலை_விபூதியைஉண்டுதான் #காச_நோயை
நீக்கிக்
கொண்டதாகவும், அதனாலேயே அவர் #ஸ்ரீசுப்பிரமணிய_புஜங்கம் பாடியதாகவும்
கூறப்படுகிறது.
இன்றும் இந்த #விபூதி_இலை தீராத பல #நோய்களை_தீர்க்கும் #அருமருந்தாக
விளங்கி வருகிறது.
திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில்
முருகன் சன்னதியில் விபூதி,
சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற
சித்தர் ஒருவர் கெடுதல்
செய்யும் நோக்கத்தில்
ஆதிசங்கரருக்கு
செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார்.
இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார்.
மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார்.
இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை.
அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து
மனமுறுக வேண்டினார்.
அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரசாதத்தை உடலில்
பூசிக் கொண்டு,
அதை உள்ளேயும் உள்கொண்டார்.
சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி மீது
அதிக பற்று கொண்டு மனமுறுகி
32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.
அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு,
சுவாமியின் பெருமை போன்றவை குறித்து
இருந்தது.
அதில் 25வது பாடலில்
இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா!
நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும்
விட்டு விடும் என்று
#சுப்பிரம்மண்ய_புஜங்கத்தில்ஆதிசங்கரர்_சொல்லி_இருக்கிறார்.
#பன்னீர்_இலை என்பதற்கு அர்த்தம்.
இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும்.
முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும்.
பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும்,
அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர்இலைகள்
பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல்
போன்று காட்சி அளிக்கும்.
1.
பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.
இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.
பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.
திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.
பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய்நீக்கும்உண்மையை
யும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில்எடுத்தியம்புகிறார்.
7.
பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்.
இலை விபூதியின் வரலாறு,
//////////////////////////////////////////
என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம்
போன்று ஒளி வீசி நின்றான்
முருகப் பெருமான்.
அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின்
இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை
என்கிறது புராணம்.
பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர,
பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
#தாடகை எனும் #பெண்ணை #ராமபிரான் மூலமாக #வதம் செய்த காரணத்தினால்
தனக்கு ஏற்பட்ட #குன்மம் முதலான #நோய்கள்_தீர, #ராமபிரான்_தன்_கனவில்
(முருகன்) கூறியபடி, #செந்திலாண்டவன் #இலை_விபூதியைத்_
தரித்துக் கொண்டு
ராமபிரான்
#நோய்கள்
#நீங்கப்_பெற்றார்
விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது.
அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற #அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து #சங்கரருக்கு
உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள
கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார்.
ஒரு நாள் இரவு,
இறைவன் அவர்
கனவில் தோன்றி,
"என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம்
எனும் திருச்செந்தூர்
சென்று அவனைத் தரிசித்தால்
உன் நோய் முற்றிலுமாக
நீங்கப் பெறுவாய்"
என்று கூறினார்.
உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார்,
ஆதிசங்கரர். கடலில் நீராடி,
பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார்.
அதே நேரம் அவருக்கும்
இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே,
மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன.
வடமொழியில் #பாம்பைப் #புஜங்கம் என்பர்.
வடமொழி இலக்கணப்படி, #புஜங்க_விருத்தமாக அமைந்தன பாடல்கள்.
பாடி முடித்து இலை #விபூதியைப்_பெற்று_அணிந்து #கொண்ட_சங்கரருக்கு
வெகு விரைவில்
#நோய்_குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால்,
தானே நோயை விரட்டி இருக்க முடியும்.
ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை,
தானே அனுபவித்து உலகோருக்குப்
பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய
திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார்.
பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, #தூண்டுகை_விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்ற பின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம்.
அதன் படி திறந்து பார்த்தபோது,
தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்
என்கிறது கோயில் வரலாறு.!!!!