Gulfee Karthi

Gulfee Karthi தினம் ஒரு தகவல்

12/11/2025
12/11/2025
11/11/2025
ஓம் முருகா 🐓🦚🙏
10/11/2025

ஓம் முருகா 🐓🦚🙏

01/11/2025

*வெள்ளி அரணாக்கொடி*

இதை பழைய காலத்தில் விவசாய குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்..

விவசாய குடும்பம் மட்டுமே இல்லை
கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில் தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும்
இருப்பீர்கள்....

என்ன அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும்
கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???)
அணிந்து மட்டுமே இருப்பார்கள்..

இதை பார்த்து பார்த்து பழகி இன்றைய பேரன்மார்கள்

இப்பொழுது
வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்ட தகாத பொருள் போல
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது..

அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு..

ஆண்களின் இடுப்பில்
உரசி கொண்டே இருக்கும்
அரணா என்பது

ஆண்களின்
விந்தணு பையில் வைத்து இருக்கும் விந்தணுக்கள் எதை அழிவில்லாது காப்பாற்றி கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது..

ஜோதிட ரீதியான
அடிப்படையில்
சனி பகவான்
சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார்..

இந்த சனி பகவான் நம் உடலில்
ஆங்கிலத்தில்
ஸ்பைனல் கார்ட் என சொல்லப்படும்

நடு தண்டுவட எலும்பு அடுக்குகள் உள்ளே இருந்து ஆட்சி செய்கிறார்..

முதுகுத்தண்டு வட 32 எலும்பு அடுக்குகள் கூட கருப்பு நிற
நரம்பில் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்..

இந்த தண்டுவட எலும்புக்கு கீழே அடித்தளத்தில்
சுக்கிரன் எனும் வெள்ளி இருந்தால்
அந்த தண்டுவடம் விலகுதல் பாதிக்கப்பட்டு விடுதல் போன்றவற்றை
இல்லாமல் நல்ல தேக ஆரோக்கியமான உடல் அமைப்பை கொண்ட மனிதன் ஆக வைக்கிறது..

அதே போல தான் பெண்களின் இடுப்பில் ஒட்டியாணம்
தங்கத்தினால் அணிவிக்கப்படும்

இது
அந்த பெண்ணின்
கருப்பையில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து
நல்ல விதமாக

மகப்பேறு எனும்
குழந்தைகள் பேறு பெற உதவுகிறது...

எம்மை பொறுத்தவரை
திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத தம்பதியினர்
ஆண் வெள்ளி அரணாக்கொடி
அணியும் போது
தன்னுடைய விந்தணு உற்பத்தி அதிகப்படியான அளவில் கொண்டு வர உதவும்...

பெண் தங்க அராணக்கொடி
அல்லது
பெண்கள் தன் தொப்புளில்
சிறிதளவு ஆவது
தங்கம் அணிய கர்ப்பம் தங்கும் என நம்பலாம்...

ஆண்களுக்கு இன்னொரு குறிப்பு
தற்போதைய இளைஞர்கள் அனைவரும்.
இரு சக்ர வாகனங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள்...

சிறு வயதிலேயே (31 வயது)
பைக் அதிகமாக ஓட்டுவதால்
தண்டுவடம் கொஞ்சமாக வலி கண்டு சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த
ஒருவரை அவர் வெள்ளி அரணாக்கொடி அணியாமல் இருப்பதை சுட்டிக்காட்டி
அணிய சொன்னேன்..

ஆறு மாத காலத்திலேயே தன் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருந்த நிலை மாறி விட்டதை மிகப்பெரும் அதிசயமாக மீண்டும் வந்து சொன்னார்கள்....

கண்ட கண்ட நகைகளை வாங்கி அணிவதை விட்டு தேவைக்கேற்ப நகைகளை அணியலாம்.

*தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்*

*தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்*

*தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்*

*தன்வழித் தன்னரு ளாகிநின் றானே .*

31/10/2025

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் அனைவருக்கும் .சொல்லுங்கள்

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,
சர்க்கரை வியாதி இல்லை,
இதய நோய்கள் இல்லை .....
வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில்
கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை
முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.

ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.

வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...!!

24/07/2025

Address

Queenstown Estate
Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Gulfee Karthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gulfee Karthi:

Share